தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றாவிட்டால் சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
திரைத்துறையினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை,காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் சினிமாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்ளவில்லை. அதில் முக்கியமாக இயக்குனர் பாரதிராஜா கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து பாரதிராஜாவிடம் “நீங்கள் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என்றதற்கு, “ஒவ்வொரு மாநிலத்திலும்,அந்தந்த மாநிலத்தின் பெயரில் தனித்தனியாக நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.கேரளாவில் “கேரள நடிகர்கள் சங்கம்”,கர்நாடகாவில் “கர்நாடக நடிகர்கள் சங்கம்”, ஆந்திராவில் “ஆந்திர நடிகர்கள் சங்கம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.ஆனால்,இங்கு மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது.அந்தப் பெயரை தமிழக நடிகர்கள் சங்கம் என்று மாற்றும்வரை,அந்த சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும்,போராட்டங்களிலும் பங்கேற்க மாட்டேன்” என்றார்.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை