• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

April 12, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி துவக்க விழாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடி நிகழ்ச்சியை இன்று(ஏப் 12)தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியை முடித்து டெல்லி புறப்பட்ட பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை மனுவை அளித்தார்.அதில்,உச்சநீதிமன்ற தீர்ப்பை காவிரி மேலாண்மை வாரியத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், அனைத்து அதிகாரம் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்றும்,அடுத்த பருவ காலம் ஜூன் 1ம் தேதி தொடங்கவுள்ளதால்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க