• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நாளை முதல் முறையாக செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

April 11, 2018 தண்டோரா குழு

நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி ஐஐடியில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 12)நாளை தமிழகம் வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வரும் மோடி,அங்கிருந் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.

பின்னர்,ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று,அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்நிலையில்,சென்னை ஐஐடியில் நாளை பிற்பகல் செய்தியாளர்களை மோடி சந்திக்க உள்ளார்.தமிழகத்தில் செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க