• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரித்து மேய்ந்த சாம் பில்லிங், கொல்கத்தாவை வென்று சாதனைப் படைத்த சிஎஸ்கே!!

April 11, 2018 tamilsamayam.com

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல்., தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது.

இதனிடையே, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தால், இன்றைய போட்டி ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் நடைபெறுமா என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். இதன்பின் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்ட ன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ரசல் சிக்சராக பறக்கவிட்டார். கடைசி வரை நிலைத்து நின்ற ரசல், 11 சிக்சர் 1 பவுண்டரி என மொத்தமாக 88 ரன்கள் அடித்து கைகொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

இதன்பின் களமிறங்கிய சென்னை அணியில், ஓபனிங் பேட்ஸ்மேன்களான வாட்சன் மற்றும் ராய்டு தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினர். வாட்சன் 42 ரன்களிலும், ராய்டு 39 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் ரெய்னா 14, தோனி 25 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்த நிலையில், மறுபுறம் சாம் பில்லிங் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய பில்லிங் 23 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய பிராவோ மற்றும் ஜடேஜாசிறப்பாக விளையாடி 19.5 ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், 202 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனையையும் சென்னை அணி நிகழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க