• Download mobile app
22 May 2026, FridayEdition - 3754
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

April 4, 2018 தண்டோரா குழு

கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் ஒரு நாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு செயல்படுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 

கமல்ஹாசனை யாரும் அரசியல்வாதியாக ஏற்று கொள்ள மாட்டார்கள்.கமலிடம் நடிகருக்கான பண்பு மட்டுமே உள்ளது.ஆனால்,அரசியல்வாதிக்கு உரிய பண்பு இல்லை.நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்றவர் அவர்.வாய்க்கு வந்தபடி கமல் பேசுவது நல்லதல்ல.காவிரி பிரச்சனை பற்றி கமலுக்கு என்ன தெரியும் ? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், கமலுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை, ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் கூறினார்.

மேலும், கமலுக்கு பதில் சொல்ல தனக்கு நேரம் இல்லை. காவிரியில் நமது உரிமையை பெறுவதே நோக்கம்.டிவிட்டரில் அரசியல் செய்து, எழுதி வைத்து படிக்கும் சிறந்த நடிகர் கமல் என்றும் அரசியல்வாதி என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கமல்ஹாசனுக்கு பக்குவம் கிடையாது.ஸ்டாலினும், கமலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் படிக்க