• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

April 4, 2018 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி தமிழகம் முழுவதும்  மத்திய அரசை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆளும் அதிமுக சார்பிலும், நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையில்,டெல்லியில் பிரதமர் மோடியை  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றுசந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தால், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆளுநர் தமிழகம் திரும்பினார்.

இதையடுத்து, தமிழகம் திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை சந்திக்க உள்ளார்.அப்போது, காவிரி விவகாரம் குறித்தும், நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழவை முன்னிட்டு விடுவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க