• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

April 4, 2018 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறித்தி தமிழகம் முழுவதும்  மத்திய அரசை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆளும் அதிமுக சார்பிலும், நேற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையில்,டெல்லியில் பிரதமர் மோடியை  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றுசந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தால், தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆளுநர் தமிழகம் திரும்பினார்.

இதையடுத்து, தமிழகம் திரும்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை சந்திக்க உள்ளார்.அப்போது, காவிரி விவகாரம் குறித்தும், நீண்டகாலமாக சிறையில் உள்ள கைதிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழவை முன்னிட்டு விடுவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க