• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எலி பொம்மையை வாயில் கடித்தபடி போராட்டம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி  திமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் வாயில் எலி பொம்மையுடனும்,கழுத்தில் எலும்பு கூடு பொம்மை அணிந்தபடியும் இன்று(ஏப் 4)சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையை அடுத்த செல்வபுரம் பகுதியில் திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டு மாட்டு வண்டிகளுடன் கலப்பையுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வாயில் பொம்மை எலியுடன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் பொய்த்து எலிக்கறி உண்ணும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை குறிக்கும் வகையில் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும்,கழுத்தில் எலும்பு கூடு பொம்மை மாலை அணிந்த படியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

 

மேலும் படிக்க