• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவின் ஒருநாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை-கமல்

April 4, 2018 தண்டோரா குழு

அதிமுகவின் ஒருநாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெறவுள்ள மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் நேற்று திருச்சி வந்தடைந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

“காவிரி பிரச்னைக்கான தீர்வு சொல்லும் கூட்டமாக இந்த திருச்சி பொதுக்கூட்டம் அமையும். அதிமுகவின் ஒரு நாள் உண்ணாவிரதத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு செயல்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நாங்கள் நம்பினோம். காவிரி விவகாரத்தில் 2016ம் ஆண்டு நடந்த நாடகமே தற்போதும் நடப்பதாக தோன்றுகிறது”. இவ்வாறு பேசினார்.

 

மேலும் படிக்க