April 4, 2018
தண்டோரா குழு
கோவையில் காட்டு யானைகளை விரட்ட,முதுமலை புலிகள் காப்பகத்தில் பயிற்சி பெற்ற 2 கும்கி யானைகள்,சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டன.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் இருந்த சுஜய்,பாரி அகிய கும்கி யானைகளுக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு,முதுமலைக்கு அனுப்பப்பட்டது.
இந்த யானைகளுக்கு பதிலாக,முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சேரன் (32) , ஜான் (27) எனப்படும் 2 கும்கி யானைகள் இன்று சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டன.கிராமங்களில் புகும் காட்டு யானைகளை விரட்டுவதில் 2 கும்கிகளும் சிறப்பு பயிற்சி பெற்றவை.
தமிழக கேரள எல்லைகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பல ஆப்ரேசன்களில் இரண்டும் வெற்றிகரமாக செயல்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 30வயதுடைய இந்த யானைகள், இனி வன ரோந்து பணிகளில் ஈடுபடும் என வனப்பாதுகாவலர் ராம சுப்பிரமணியம் தெரிவித்தார்.