• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் இளைஞர்கள் போராட்டம்

March 31, 2018 தண்டோரா குழு

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

எனினும் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படுவில்லை.

இதையடுத்து,பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாய அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  காவிரி உரிமைக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை மெரினாவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதில் 4 பெண்கள் உள்பட 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க