• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு திரும்பினார் சசிகலா

March 31, 2018 தண்டோரா குழு

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வெளிவந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார்.

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் கடந்த 20ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இதையொட்டி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சையில் தமது கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சசிகலா, அதன்பின் தஞ்சை, உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்பட்டார்.

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பரோல் முடிவதற்கு, மூன்று நாட்களுக்கு முன்பே சசிகலா சிறைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க