• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலையில் எம்.பி. பதவி எதற்கு?: அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது ராஜ்ய சபா பதவியை ராஜினாமா முடிவு செய்துள்ளதாக அதிமுக எம்.பி. முத்து கருப்பன் தெரிவித்துள்ளார்.அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன்டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காவிரிக்காக தற்கொலை போன்ற மலிவான செயலில் ஈடுபட மாட்டேன். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும்,அவையை முடக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மக்களுக்கு குடிக்கவும்,விவசாயிகளுக்கு விவசாயம் செய்யவும் தண்ணீர் கிடைக்காத போது MP பதவி எனக்கு எதற்கு? விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.  வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றம் இல்லை என்றார்.

மேலும், தனக்கு மாநிலங்களவையில் இன்னும் 2 ஆண்டுகள் பதவி உள்ளதாகவும் நாங்கள் வாக்களித்து தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.எனவே மக்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் மாநிலங்களவை தலைவரிடம் அடுத்த வாரம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர்  கூறினார். முத்துக்கருப்பனின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க