• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டிக் கொடுத்த மார்டின் தொண்டு நிறுவனம்

March 29, 2018 தண்டோரா குழு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளில் மார்டின் தொண்டு நிறுவனம் சார்பில் 165 கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தனர்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மை பணிகளை பொதுமக்களும்,தொண்டு நிறுவனங்களும், அரசும் செய்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாதவர்களுக்கு மார்டின் தொண்டு நிறுவனம் சார்பில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில், கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. மொத்தம் 165 கழிப்பறைகள்,19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

இந்த கழிப்பறைகளை மார்டின் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த லீமார் ரோஸ் மார்டின் கோவை மாநகராட்சியிடம் கழிப்பறைகளை ஒப்படைத்தார். தொடர்ந்து இது போல பல்வேறு பகுதிகளில் கழிப்பறைகள் இல்லாத பகுதிக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக கழிப்பறைகள் இல்லாமல் பொது கழிப்பறைகளை பயன்படுத்தி வந்தவர்களுக்கு தற்போது தனித்தனியே கழிப்பறைகள் கட்டி கொடுத்து உள்ளது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க