• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல அஜீத் சொன்ன அந்த ஒரு வார்த்தையில்  நெகிழ்ந்த மாணவர்கள்

March 26, 2018 தண்டோரா குழு

தல அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக படபிடிப்புகள் ரத்து செய்யபட்டுள்ளன. இதற்கடையில், தல அஜித் தனது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங்கில் பற்றி அறிய முடிவு செய்தார்.    அதற்கான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்றுள்ளார். அங்கு ஏரோ மாடலிங் துறையை சேர்ந்த மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்த அஜித், அக்கல்லூரியில் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்களை சந்தித்தார்.

அப்போது அஜித்தை சந்தித்த மாணவர்கள், 12 மணி நேரம் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூற, அதற்கு அஜித் “சாரி..பா உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்” எனக் கூற அங்குள்ள மாணவர்களை நெகிழவைத்துள்ளது. அப்போது அந்த மாணவர்கள் அஜீத்துடன் நின்று புகைபடம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில்,  அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அவர்கள்,

தாங்கள் ஒரு விஜய் ரசிகர்கள் எனவும், அந்த இரவுநேரத்தில் மிகச்சோர்வாக இருந்த அவர் எங்களுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு எங்களிடம் எளிமையாக நடந்துக் கொண்டது அவரின் சாந்தகுணத்தை காட்டுவதாக கூறியுள்ளனர்.

தற்போது அந்த புகைபடம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க