• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்பதை ஏற்க முடியாது– திருமாவளவன்

March 22, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன்,சங்கர்,செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது.இதையடுத்து,இவர்கள் மூன்று பேர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில்,இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இவர்களுடைய நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

ஆளுநர்கள் தன் விருப்பம்போல் செயல்பட தொடங்கினால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அதிகாரம் இல்லாத அரசாக மாறிவிடும்.புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என்பதை ஏற்க முடியாது.புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், மேல்முறையீடு செய்யும் என நம்புகிறேன். பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு இறுதியானது அல்ல என்றார்.

மேலும் படிக்க