• Download mobile app
24 Jul 2025, ThursdayEdition - 3452
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நடிகை  ஸ்ரேயா மும்பையில் ரகசிய  திருமணம்

March 17, 2018 தண்டோரா குழு

 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார். ரஜினியுடன்  சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கடைசியாக  தமிழில் சிம்புடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். நடிகை ஸ்ரேயா ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், மார்ச் மாதம் திருமணம் என்றும் தகவல்கள் வெளியானது, ஆனால் தேதி கூறவில்லை.

இந்நிலையில் ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12-ந்தேதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு முதல் நாள் அது தொடர்பான கொண்டாட்டங்கள் நடந்தன. மறுநாள் காலை இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்தார்.

ஸ்ரேயா ரகசிய திருமணம் பற்றிய தகவல் இன்று மும்பை சினிமா வட்டாரத்தில் பரவியது. இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அதை அவர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க