• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து கமல் ஹாசன் ஆறுதல்.

March 17, 2018 தண்டோரா குழு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காட்டுத் தீ விபத்தில் சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நிஷா உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ராஜகீழ்ப்பாக்கத்துக்குச் சென்ற கமல்ஹாசன் அனுவித்யாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

ஒருவாரமாக காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில் முன்கூட்டியே எச்சரித்துத் தடுத்திருக்கலாம் என்றும் இந்த விபத்தை பாடமாகக் கொண்டு எதிர்காலத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க