• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது

March 16, 2018 தண்டோரா குழு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது.

மத்தியிலிருந்து கூடுதல் நிதியைப் பெறும் வகையில், ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி வலியுறுத்தி வந்தது. பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதோடு, ஆந்திரத்திற்கு நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக தெலுங்குதேசம் புகார் கூறியது.இதனால்,மத்திய அமைச்சரவையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் ராஜினாமா செய்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது என்றும் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு பாணி நாடகங்களை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது எனவும் சந்திரபாபு நாயுடு பாஜக-வை எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க