• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை மற்றும் காவி உடை அணிவிப்பு

March 15, 2018 தண்டோரா குழு

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிதுணி போர்த்தி மாலை அணிவித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் நகரில்பிரதான சாலையில் ஒரே இடத்தில பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரது மார்பளவு சிலைகள் உள்ளன. இந்நிலையில் 3 சிலைகளிலும் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், காவி துணியை போர்த்தி மாலை அணிவித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிலைகள் மீது போர்த்தப்பட்ட காவி துணிகளை வேக வேகமாக அப்புறப்படுத்தினர். மேலும்,சிலைகள் மீது காவித்துணி போர்த்தி மாலை அணிவித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பெரியார், அண்ணா சிலைகள் மீது காவிதுணி போர்த்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிட கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

மேலும் படிக்க