March 1, 2018
தண்டோரா குழு
கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உடல் நலத்தை காரணம் காட்டி மருத்துவமனையிலேயே ஒரு நாள் முழுவதையும் கார்த்திக் சிதம்பரம் கழித்தார். இதனால் சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 5 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.