• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கால்பந்து வீரராக மாறிய ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்!!

February 28, 2018

சர்வதேச ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஜாம்பவனாக திகழ்ந்த உசேன் போல்ட், தற்போது கால்பந்தாட்ட அணி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

ஓட்டப்பந்தயப் போட்டிகளின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட். ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை பெற்ற போல்ட். 100 மீ, 200 மீ, 4×100 உள்ளிட்ட ஓட்டபந்தய பிரிவுகளில் உலகசாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, உசேன் போல்ட் தற்போது கால்பந்து அணி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

31 வயதாகும் உசேன் போல்ட், தான் ஒப்பந்தம் செய்துள்ள அணியைப் பற்றி இன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க