• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்கள் வரவேற்பு

February 27, 2018 தண்டோரா குழு

சேலம் கோட்டத்தின் நீலகிரி மலை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்தடங்கள், ரயில்வே சிக்னல்கள், போன்ற ரயில்வே அமைப்புகள் பற்றிய தொன்மையான புகைப்படங்களை மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்கள் தங்களிடம் பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்கள் இருந்தால் அவற்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்,இந்த புகைப்படங்கள் பிரதி எடுத்த பின் அவை மீண்டும் உரியவர் கையில் திருப்பித் தரப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் வழங்கியவர் பெயர் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும்.

மேலும் படிக்க