• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீதேவியின் உடல் இந்திய கொண்டு வர இன்னும் 2-3நாட்கள் ஆகும் – இந்திய தூதர் நவ்தீப் சூரி

February 27, 2018 தண்டோரா குழு

சட்ட நடைமுறைகளைச் செய்து முடித்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குத் திருப்பி அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி துபாயில் குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சூரி  வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஸ்ரீதேவியின் மறைவு தொடர்பான செய்தியில் ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது.என்னால் முடிந்தவரை விரைவில் உடலை அனுப்புவதற்கு துபாய் அதிகாரிகளுடன் தான் முயற்சி செய்து வருவதாகவும், இதேபோன்ற மற்ற நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது உடலை மும்பைக்கு அனுப்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீதேவி குடும்பத்தினருடனும் அவருடைய நலம் விரும்பிகளுடனும் தான் எப்போதும் தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க