• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழக வீரர் அஸ்வின் நியமனம்

February 26, 2018 தண்டோரா குழு

தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதினோறாவது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 31ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான ஏலத்தில் சென்னை வீரர் அஸ்வினை பஞ்சாப் அணி 7 கோடிக்கு எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற தொடரின் போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார்.

முதல்முறையாக ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க