• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியம் இல்லை – பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி

February 26, 2018 தண்டோரா குழு

ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியம் இல்லை என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐ.ஐ.டி.யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐ.ஐ.டி.யுடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கப்பல் போக்குவர்த்து துறை அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். தமிழகத்தில் எந்தவொரு அரசு நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம். ஆனால் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் கணபதி பாடலை மாணவா்கள் சிலா் பாடினா். மத்திய அமைச்சா் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படாமல் இருந்தது பெரும் சா்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில்,  இது தொடா்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தான் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடவேண்டும். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் சென்னை ஐ.ஐ.டி. என்று அவா் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் படிக்க