• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

February 26, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டபள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுத் தேர்வுக்கு கூட மாணவர்கள் சரியாக தங்களது பாடங்களை பயில முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடவடிக்கை எடுக்க அப்பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க