• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை – ஆட்சியர் உத்தரவு

February 23, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயமுத்தூர் ஆட்சியர்  அலுவலகத்தில் சமீப காலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மட்டும் விளம்பரங்கள் ஒட்டுப்படுகிறது. அரசு சுவர்களிலோ அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியர்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ விளம்பர பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது  Prevention of Disfigurement Act 1959 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க