• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரும்புக் கடைகளில் குவிந்து உள்ள தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள்!

February 23, 2018 தண்டோரா குழு

தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த முடியாமல் பழுதாகியதால் கோவையில் பல்வேறு இரும்பு கடைகளில் போடப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு தனித்தனியே விற்கப்படுகிறது.

தமிழக அரசால் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த பொருட்களில் போதிய அளவிலான தரம் இல்லாத காரணத்தால்  விரைவில் சாதனங்கள் பழுதாகி உள்ளது.

இந்நிலையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய இரும்புக்கடையில் குவியல் குவியலாக இலவச கிரைண்டர்கள், மிக்சி, மற்றும் கிரைண்டர்கள் பழுதாகி கிடக்கிறது. இந்த சாதனங்களை தனித்தனியே உடைத்து இரும்பு கடைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிதி ஒதுக்கி  இலவசங்களை வழங்கினாலும் அதில் பயனில்லாமல் போதிய தரம் இல்லாத காரணத்தால் இந்த திட்டம் முற்றிலும் பயனற்று போகி உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.

மேலும் படிக்க