• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

February 22, 2018

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், விவசாய சங்கங்கள் என 54 அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனா்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி மூன்று முக்கிய தீா்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

1.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

2.அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை விரைவில் சந்திப்பது.

3.177.25 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள்  எடுப்பது குறித்த மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும்,11 ஆண்டுகளுக்கு பின்னா் தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க