• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

February 21, 2018 தண்டோரா குழு

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துல்ரஹீமை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதிநெல்லையைச் சேர்ந்த மணல் வியாபாரி சையது முகமது புஹாரி தமது தோழியுடன் சென்னை மண்ணடியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது 4 பேர் கடத்திச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் சாகுல் ஹமீது என்பவருக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்துக்காக புஹாரியை கடத்தியிருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஆள் கடத்தலுக்கு தூண்டியதாக கடந்த 12-ம் தேதி இந்திய தேசியலீக் கட்சியின் மாநிலத்தலைவர் தடா அப்துல் ரஹீமையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,அவர் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் அவர் ஓராண்டு சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்.

 

மேலும் படிக்க