February 21, 2018
தண்டோரா குழு
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துல்ரஹீமை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதிநெல்லையைச் சேர்ந்த மணல் வியாபாரி சையது முகமது புஹாரி தமது தோழியுடன் சென்னை மண்ணடியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது 4 பேர் கடத்திச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் சாகுல் ஹமீது என்பவருக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்துக்காக புஹாரியை கடத்தியிருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஆள் கடத்தலுக்கு தூண்டியதாக கடந்த 12-ம் தேதி இந்திய தேசியலீக் கட்சியின் மாநிலத்தலைவர் தடா அப்துல் ரஹீமையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,அவர் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் அவர் ஓராண்டு சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்.