• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் வைபை உருவாக்கப்பட உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

February 20, 2018 தண்டோரா குழு

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் வைபை உருவாக்கப்பட உள்ளது என்று கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

கல்வித்துறை பொறுத்தவரை தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், கோவை உள்ளிட்ட312 இடங்களில் வைபை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான விபத்துக் காப்பீடு திட்டத்தை அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.அத்திட்டத்தின் மூலம் விபத்திற்கு 1 லட்ச ரூபாயும், பெரிய காயங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும்,மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சிலிங் மேற்கொள்ள உள்ளோம்.

தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற சினேகா என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.

மாணவர்கள் எவ்வித பயமுன்றி தேர்வை சந்திக்க பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விற்கு கேள்வி தாள்கள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க