• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தமிழக அரசு அறிவிப்பு

February 20, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதன்படி, மார்ச் 5-ம் தேதி, மாவட்ட ஆட்சியத் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது.

மார்ச் 6ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கூட்டம் நடைபெறுகிறது.
மார்ச் 7-ம் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க