• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தமிழக அரசு அறிவிப்பு

February 20, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதன்படி, மார்ச் 5-ம் தேதி, மாவட்ட ஆட்சியத் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது.

மார்ச் 6ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கூட்டம் நடைபெறுகிறது.
மார்ச் 7-ம் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க