• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன்

February 20, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய சி டி ஸ்கேன் வசதியை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் இன்று(பிப் 20) திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை ஒரு சி டி ஸ்கேன் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் புதியதாக சி டி ஸ்கேன் வாங்குவதற்காக தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று புதியதாக சி டி ஸ்கேன் வசதியை அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த புதிய  சி டி ஸ்கேன் அதி நவீன தற்போதைய புதிய தொழில் நுட்பங்களுடன் ஒன்றரை கோடி மதிப்பில் நிறுவப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருந்த பழைய சி டி ஸ்கேனும் புதியதாக மாற்றப்பட்டது.இதனால் வழக்கமாக நூறு பேருக்கு ஸ்கேன் செய்யும் வசதி இருந்த நிலையில் , தற்போது 200 பேருக்கு ஸ்கேன் வசதி செய்து தர முடியும் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க