• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் –  சித்தராமையா

February 17, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி கண்காணிப்பு குழு ஏற்கனவே உள்ளதால் மேலாண்மை வாரியம் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால், அதனை கர்நாடகா எதிர்க்கும். காவிரி பாசன மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசு தீர்வுகாண வேண்டும் என்றும், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க