• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்கவில்லை – விவேக் தகவல்

February 13, 2018 தண்டோரா குழு

மருத்துவமனையில் தான் நேரில் பார்க்கவில்லை என்று இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.தலைமைச் செயலதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.  இந்த விசாரணை ஆணையம் கடந்த வாரம்இளவரசியின் மகனும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பியது.ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய சம்மனின் பேரில் இன்று ஆஜரான விவேக்ஜெயராமனிடம் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது, ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்றும் விவேக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக், மீண்டும் வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க