• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை நாளைக்குள் அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

February 8, 2018 தண்டோரா குழு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை நாளைக்குள் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் செயல்பட்டு வந்தன.ஆயிரங்கால் மண்டபம் அருகே, வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இருந்தன.இங்கு கடை எண், 75, 76 ல் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது. பயங்கர தீ விபத்துக்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இம்மனு விசாரணைக்கு வந்தது அப்போது, மீனாட்சி கோயில் வளாகத்தில் செயல்படும் 115 கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும், 3 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது.

மேலும் படிக்க