• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாவட்ட நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

February 8, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கிருஷ்ணாம்பதி குளம், உக்கடம்,பெரிய குளம்,வாலாங்குளம்,முத்தூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பறவைகள் கணக்கெடுப்பில் வனத் துறையினர்,தன்னார்வலர்கள் கலந்துகொண்டு உள்ளனர்

கோடை காலம் துவங்கும் முன்பு பறவைகள் கணக்கெடுப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம் என்பதால் தற்போது இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்,25 குளங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள வயல் வெளிகளில் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மொத்தம் 18 குழுக்கள் உள்ளனர்.ஒவ்வொரு குழுவிலும் நான்கு நபர்கள் உள்ளனர்.மேலும் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பிறகு கோவை நீர்நிலைகளில் இருக்கும் பறவைகள் குறித்த விபரங்கள் தெரிய வரும்.

மேலும் படிக்க