• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூக்கு கண்ணாடி 50ஆயிரம் ரூபாயா? சர்ச்சையில் கேரள சபாநாயகர்

February 3, 2018 தண்டோரா குழு

மூக்கு கண்ணாடி வாங்கிய செலவாக அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ரூ. 50 ஆயிரம் பெற்றுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கட்சி முன்னணி ஆட்சியில்இருக்கிறது. அங்குள்ள சட்டசபையின் சபாநாயகராக ஸ்ரீராமகிருஷ்ணன் இருந்து வருகிறார். அம்மாநிலத்தில் நேற்று தாக்கல் செய்த 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் கடும் நிதிக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு சிக்கனம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டிபி.பினு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சட்டசபை செயலர் அளித்த பதிலில், சபாநாயகர் 4,900 ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி பிரேம், 45 ஆயிரம் ரூபாய்க்கு கண்ணாடி லென்சுகளை வாங்கியுள்ளதாகவும், அதற்கான செலவை, அரசு கருவூலத்திலிருந்து பெற்று கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பினு திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம்  கூறியதாவது-

கேரள மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தனக்கு மூக்கு கண்ணாடி வாங்குவதற்காக ரூ.49ஆயிரத்து 900 செலவு செய்து அரசிடம் பணம் பெற்றுள்ளார்.ரூ.4 ஆயிரத்து 900 கண்ணாடியின் பிரேமுக்காகவும், ரூ.45 ஆயிரம் லென்சுக்காகவும் என ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இதேபோல கடந்த 2016ம் ஆண்டு அக்டோர் 5-ம் தேதி முதல் கடந்த ஜனவரி 19ம் தேதி வரை மருத்துச் செலவாக ரூ. 4.25 லட்சம் செலவு செய்ததாக அரசிடம் ஆவணங்கள் தாக்கல் செய்து பணம் பெற்றுள்ளார். மருத்துவர்கள் அறிவுரையின் பெயரில் இதுபோன்ற கண்ணாடிகளை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராமகிருஷ்ணன் வாங்கிய கண்ணாடியின் உண்மையான பில்கள் அனைத்தும் கேட்டேன் ஆனால், என்னிடம் கொடுக்காமல், அதை சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்துள்ளார் “ எனத் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்க