• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் லாரி மோதியதில் மூன்று பேர் பலி

February 3, 2018 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் லாரி இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி பைபாஸ் சாலையில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மற்றொரு லாரி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் அஸ்வின், கார்த்திக், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் லாரி ஓட்டுநர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைப் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க