• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை – தமிழக அரசு

January 29, 2018 தண்டோரா குழு

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் விவகாரத்தில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கிடையில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, தலைமைச் செயலாளர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பது, கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு தவறானது.

கடலோர ஒழுங்குமுறை விதிகள் 1991ஆம் ஆண்டு தான் கொண்டுவரப்பட்டது என்றும், அதற்கு முன்னதாகவே, எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டதாகவும் எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படுவதால், எந்த விதிமீறலும் இல்லை என்றும், டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளரின் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த பதில் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் படிக்க