• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

January 29, 2018 தண்டோரா குழு

“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளளர்.இப்படத்தில் இடம் பெற்றள்ள சொடக்கு பாடல் சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஆனது.

இதற்கிடையில்,  அரசியல்வாதிகளுக்கு எதிராக ”சொடக்கு” பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுக நிர்வாகி சதீஸ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் சொடக்கு பாடலில் உள்ள “அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற வரியை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தாக்கல் செய்ய அதிமுக நிர்வாகி சதீஸ்குமாருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க