• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

163 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் மீண்டும் இயக்கம்

January 27, 2018 தண்டோரா குழு

புதுதில்லியில் சுமார் 163 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 1855ம் ஆண்டு, இங்கிலாந்தின் கிட்சன், தாம்ப்சன் அண்ட் ஹெவிட்சன் நிறுவனத்தால் பெர்ரி குயின் எக்ஸ்பிரஸ் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு, கொல்கத்தாவிற்கு கொண்டு வரப்பட்டடு மேற்கு வங்கம்-ஹவுரா இடைய இயக்கப்பட்டது.

சுமார் 54 ஆண்டுகள் இயங்கிய இந்த ரயில் உலகின் பழமையான நீராவி எஞ்சின் ரயில் ஆகும்.கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி மாதம், பெர்ரி குயின் ரயிலுக்கு தேசிய சுற்றுலா விருது வழங்கப்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு, உலகின் பழமையான நீராவி எஞ்சின் ரயில் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்நிலையில்,பெர்ரி குயின் எக்ஸ்பிரஸ் குடியரசு தினத்தில் இருந்து புதுடில்லி ரயில்நிலையத்தில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரயில் புதுடில்லி ரயில்நிலையத்திலிருந்து டெல்லி வரை இயக்கப்பட்டது.

மேலும் படிக்க