• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் விவேக்கை மனம் நெகிழ வைத்த புகைப்படம்

January 26, 2018 தண்டோரா குழு

நாட்டின் 69 வது குடியரசு தின விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. சென்னை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றினார்.

பின்னர்,தமிழக திட்டங்களை அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிலையில்,பள்ளிக்கல்வி துறை குறித்த அலங்கார ஊர்தி செல்லும் போது அதன் அருகில் ஒரு சிறுவன் தேசிய கொடியை விற்பது போன்ற புகைப்படத்தை ஒரு புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், அந்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் விவேக்,
இந்தப் படம் மனம் நெகிழச் செய்கிறது. எல்லோருக்கும் இலவசக்கல்வி; இலவச மருத்துவம்! வரும் நாளே,நாம் உண்மையான குடியரசு! If the youth decide , they can preside !! என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க