• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் போலீசார் தாக்கியதாக தீக்குளித்த டாக்சி ஓட்டுநர் மரணம்

January 26, 2018 தண்டோரா குழு

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனம் உடைந்து தீக்குளித்த கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் ஆயள்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், சென்னை தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் தரமணி பகுதியில் காரில் சென்ற அவர், சீட் பெல்ட் அணியவில்லை என போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால், போலீசாருக்கு மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மணிகண்டனையும், அவரது குடும்ப பெண்களையும் போலீசார் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மணிகண்டன், பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு மணிகண்டனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நிலை மோசமாகி, இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழந்த தகவல் கேட்ட அவரது தாயார் வசந்தா, சகோதரிகள் மருத்துவமனை வளாகத்தில் அழுது துடித்தனர்.

முன்னதாக மணிகண்டனை தகாத வார்த்தைகளால் பேசியதாக புகாருக்கு ஆளான போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வனை பணியிடைநீக்கம் செய்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க