• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

January 25, 2018 தண்டோரா குழு

கோவையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய மத்திய தொழிற்சங்கத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்குதல், சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎண்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு தொழிலாளர் மற்றும் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய தொழிற்சங்கத்தினர், கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

மேலும் படிக்க