• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

January 25, 2018 தண்டோரா குழு

கோவையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய மத்திய தொழிற்சங்கத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்குதல், சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎண்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு தொழிலாளர் மற்றும் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய தொழிற்சங்கத்தினர், கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

மேலும் படிக்க