• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்க அடிச்சது 300 ரன்களுக்கு சமம்: புஜாரா!

January 25, 2018 tamilsamayam.com

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி, அடித்த 187 ரன்கள் 300 ரன்களுக்கு சமமானது என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணி ஒருவிதமான போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் படுதோல்வியை சந்தித்து, தொடரை 2-0 என இழந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாற முதல் இன்னிங்சில் 187 ரன்களுக்கு சுருண்டது.

இதுகுறித்து புஜாரா கூறுகையில்,”முதல் டெஸ்ட் நடந்த கேப்டவுன் ஆடுகளத்தை விட மிகவும் கடினமாக இருந்தது. இந்திய அணி அடித்த 187 ரன்கள் சாதரண ஆடுகளத்தில் 300 ரன்கள் எடுத்ததற்கு சமம். ஒட்டு மொத்தமாக இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது”. என்றார்.

மேலும் படிக்க