• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கான பாராட்டு விழா

January 24, 2018 தண்டோரா குழு

நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது.

நாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த விருதுக்காக தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.இந்நிலையில் இதற்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ,மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆகியோர் கலந்துக் கொண்டு ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர்கள்,மற்றும் அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து காவலர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க