கோவையில் பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம் இன்று
(ஜன 22)நடைப்பெற்றது.
கோவையில் பேருந்து கட்டணம் குறித்து பொதுமக்களின் எதிர்ப்பை நேரடியாக அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு உயர்த்தி உள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை பெறும் வகையில் மாதர் சங்கத்தினர் அரசுக்கு எதிராக வாக்குகள் சேகரிக்கும் பெரும் இயக்கத்தை துவக்கி உள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக வாக்கு பெட்டி மற்றும் வாக்கு சீட்டுகளுடன் நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் பொதுமக்களை வாக்களிக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துகளின் இருந்து இறங்கும் பயணிகளிடம் இந்த வாக்கு சீட்டுகளை அளித்து அந்த பெட்டியில் தங்களது கருத்தை போட வலியுறுத்துகின்றனர். இந்த வாக்குகளை பெற்று அதனை தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் இதுபோன்று பொதுமக்களிடம் வாக்குகளை பெற உள்ளதாக கூறி உள்ளனர். பேருந்து கட்டண உயர்வுக்கு பெரும்பாலும் அநியாயம் என்றே வாக்களித்த உள்ளதாக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு