• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள்

January 9, 2018 தண்டோரா குழு

மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் படித்தவர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ” காதம்பரி ” நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.இதற்கிடையில், சிவ்கார்த்திகேயன் விழா மேடைக்கு வந்தவுடன் வேலைக்காரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போன்று அரங்கில் இருந்த அனைத்து மாணவர்களும் தங்கள் செல்போனில் டார்ச் அடித்து சிவகார்த்திகேயனை வரவேற்றனர்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்,

வேலைக்காரன் படம் இந்த அளவிற்கு வெற்றி பெரும் என்று நான் எதிர்பாக்கவில்லை. இக்கல்லூரிக்கு விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. இங்கு வந்தது என் கல்லூரி நாட்களை நினைவுப்படுத்துகிறது. அதிலும் நீங்கள் என்னை வரவேற்ற விதத்தை பார்க்கும் போதே ஏதோ வேலைக்காரன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் சூட்டிங் ஸ்பார்டில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இது எனக்கு ஒருஇன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அதற்கு முதலில் உங்களுக்கு நன்றி, நான் பிஎஸ்ஜி கல்லூரிக்கு என் கல்லூரி நாட்களில் வந்துள்ளேன். இங்கு தான் அனிருத்தை முதன் முதலில் நான் சந்தித்து பேசினேன் தற்போது நாங்கள் நல்ல நண்பர்களாக உள்ளோம் என்றார்.

மேலும் படிக்க