• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில்அரசு பேருந்து ஸ்டிரைக் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

January 4, 2018 தண்டோரா குழு

ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகத்தில் அரசு பேருந்து வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் 2.40 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2.57% ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை,கோயம்பேடு,திருவான்மியூர்,பாரிமுனை,வடபழனி,தாம்பரம்,மாதவரம் மற்றும் புறநகர பஸ் டிப்போக்களில் பஸ்களை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையிலுள்ள பஸ் டிப்போவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,பஸ்கள் இயக்கப்படாததால், மாலை நேரத்தில் வீடு திரும்பும் பொதுமக்கள் அனைவரும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதைப்போல் திருச்சி, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மன்னார்குடி, எண்ணூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ்களும் டிப்போவிற்கு திரும்பி சென்று நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க